திருமலைக்கேணி, திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர் இளநீர், தயிர், தேன், விபூதி, திருமஞ்சணம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.