ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சந்தனகூடு திருவிழா உள்ளூர் விடுமுறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2017 02:08
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு (ஆக.,16) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி தர்காவில் சந்தனகூடு திருவிழா (ஆக.,16) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ஆக.,19 வேலைநாளாக ஈடுசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.