மேலூர்: மேலூர் நாகம்மாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். செக்கடி நாகம்மாள் கோயில் ஆடி மாத திருவிழா துவங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி 30 நாட்கள் எண்ணெய் தாளிதம் இல்லாமலும், மாமிசம் சாப்பிடாமலும் கடும் விரதமிருந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மண் கட்டி தெப்பக்குளத்தில் துவங்கப்பட்ட ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நாகம்மாள் கோயிலை அடைந்தது. மின் மோட்டார் மூலம் நாகம்மாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. 360 பேர் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். இதில் 30 அடி நீளம் ஒரே அலகில் 3 பேர் குத்தி வந்தனர்.