பதிவு செய்த நாள்
16
ஆக
2017
02:08
கோவை : சமஸ்கிருத பாரதி சார்பில் இன்று முதல், 24ம் தேதி வரை நடக்கும் இலவச சமஸ்கிருத பேச்சு பயிற்சி வகுப்புகளுக்கு முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.
சமஸ்கிருத பாரதி சார்பில், கோவை மாநகரில் உள்ள, 10 இடங்களில் இன்று முதல், 24ம் தேதி வரை இலவச சமஸ்கிருத பேச்சு பயிற்சி வழங்கப்படுகிறது. அதன்படி, ஆர்.எஸ்., புரம் புரந்தரதாசர் கலையரங்கில் காலை, 10:30 முதல் மதியம், 12:30 மணி வரையும், மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரையும் பயிற்சி வழங்கப்படுகிறது.
சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோவில் மற்றும் டி.வி.எஸ்., நகர் காயத்திரி மந்திரில் மாலை, 6:00 முதல், 8:00 மணி வரை பயிற்சி வழங்கப்படுகிறது. டி.வி.எஸ்., நகர் மருதம் அக்ஷயா அபார்ட்மென்ட்டில் காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை அளிக்கப்படுகிறது.
வடவள்ளி சின்மயா மெட்ரிக் பள்ளி, வடமதுரை பாலதீப் வித்யாலயா, சிங்காநல்லூர் வெங்கடலட்சுமி மெட்ரிக் பள்ளி, ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில், பீளமேடு பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி, போத்தனூர் அருகே மகாலிங்கபுரம் ஆகிய இடங்களில் மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த இலவச பயிற்சியில், 10 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் பங்குபெறலாம். பயிற்சி வகுப்புக்கு பிறகு தொடர் வார வகுப்புகள் நடைபெறவுள்ளன. விபரங்களுக்கு, 94433 94367 - 68, 69 ஆகிய எண்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என, சமஸ்கிருத பாரதியின் கோவை மாநகர ஒருங்கிணைப்பாளர் ராகவேந்திரன் தெரிவித்துள்ளார்.