பதிவு செய்த நாள்
17
ஆக
2017
09:08
செவ்வாயை நட்பு கிரகமாக கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
செவ்வாய் இந்த மாதம் ஆக. 28- வரை உங்களுக்கு சாதகமாக 3-ம் இடத்தில்
இருப்பதால் பக்தி உயர்வு மேம்படும். முயற்சி அனைத்திலும் வெற்றி உண்டாகும்.
பொருளாதார வளம் மேம்படும். அதன் பின் அவரால் நற்பலனை கொடுக்க முடியாது. புதன் செப். 2- வரை சாதகமற்ற நிலையில் இருப்பதால் பகைவரால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. அதன் பிறகு 4-ம் இடத்தில் இருந்து நற்பலன் அளிப்பார். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். சுக்கிரன், ராகு மாதம் முழுவதும் நன்மையை வாரி வழங்குவர்.
குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருப்பதால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். பிள்ளைகளின் செயல்பாட்டால் பெருமை கிடைக்கும். பெண்களால் வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். இந்நிலையில் செப். 2-ல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது.
உடல் நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்து பார்வை சாதகமாக இருக்கிறது. குருவின் பார்வை மூலம் இடையூறு நீங்கும்.சுக்கிரனால் கையில் பணப்புழக்கம்
அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு கூடும். ஆக. 21-க்கு பிறகு பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஆக.17, செப். 12,13- ல் பெண்கள் உதவிகரமாக
இருப்பர். அடிக்கடி விருந்து, விழா என சென்று வருவீர்கள். செப். 7,8,9- ல் உறவினர்கள்
வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஆக. 22,23-ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. செப்.1- க்கு பிறகு புதனால் நற்பலன் உண்டாகும். கணவன், -மனைவி இடையே அன்பு மேம்படும். சூரியனால் உடல் நலம் பாதிக்கப்படலாம்.
ஆக. 28-க்கு பிறகு பயணத்தின் போது சற்று கவனம் தேவை. ஆக. 24,25, செப். 3,4- ல் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை ஏற்படலாம்.
தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுக்கிரனால் அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். செப். 5,6- ல் எதிர்பாராத பணவரவு வரும். ஆக. 18,19,செப். 10,11,14,15ல் சந்திரனால் முயற்சியில் தடை, பொருள் விரயம் உருவாகலாம். ஆக. 26, 27,28ல் பகைவர்களை வெல்லும் ஆற்றல் உண்டாகும்.
பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். கோரிக்கைகளை ஆக.28-க்குள் கேட்டு பெற்றுக் கொள்ளவும். செப். 2-க்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு திறமைக்கு ஏற்ப கவுரவம் கிடைக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் நற்பலன் காணலாம். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆதரவால் கோரிக்கை நிறைவேறும். செப். 5,6- ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும்.
கலைஞர்கள்- புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த நன்மை கிடைக்கப் பெறுவர். ஆக.28க்கு பிறகு முயற்சியில் தடை, மனச்சோர்வுக்கு ஆளாகலாம்.
மாணவர்கள் பிற்போக்கான நிலையில் இருந்து செப். 1-க்கு பிறகு விடுபடுவர். புதனால்
போட்டிகளில் பரிசு கிடைக்கப் பெறுவர்.
விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவர். காய்கறிகள்,பழங்கள், கீரைவகையில் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் ஆக. 28-க்குள் கைகூடும்.
பெண்கள்- குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். ஆக.20, 21, செப். 16-ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். ஆக. 29,30-ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். செப். 2- க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்கள் வங்கி கடன் மூலம் தொழிலை விரிவுபடுத்துவர்.
நல்ல நாள்: ஆக. 17, 20, 21, 26, 27, 28, 29, 30,
செப். 4, 5, 7, 8, 9, 12, 13, 16
கவன நாள்: ஆக.31, செப்.1, 2 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 5, 6
நிறம்: வெள்ளை, நீலம்
பரிகாரம்
* சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
* சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு நெய் தீபம்