பதிவு செய்த நாள்
17
ஆக
2017
09:08
குரு பகவானை உச்சமாக கொண்ட கடக ராசி அன்பர்களே!
இந்த மாதம் சுக்கிரனால் நன்மை உண்டாகும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். குடும்பத் தேவைகள் குறையின்றி நிறைவேறும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
குருபகவான் 3-ம் இடத்தில் இருப்பது சிறப்பானது அல்ல. முயற்சியில் அவ்வப்போது தடைகள் ஏற்பட்டு இருக்கும். செப்.2-ல் குரு 4-ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார்.
இந்த இடமும் அவ்வளவு சிறப்பானது என சொல்ல முடியாது. ஆனால் கடந்த கால பலனில் இருந்து நிலைமை மாறுபடும். குருபகவான் 4-ல் இருக்கும் போது மன உளைச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார்
குடும்பத்தில் புதனால் செப்.1 வரை பிரச்னை உருவாகலாம். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். செப்.14-க்கு பிறகு வீட்டுக்கு தேவையான வசதி கிடைக்கப் பெறுவீர்கள். ஆக.18,19, செப். 14,15- ல் முயற்சியில் வெற்றி உண்டாகும். புத்தாடை, அணிகலன்கள் சேரும்.
செப்.5,6-ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் அவர்கள் வகையில் ஆக.20,21,22 செப்.16-ல் பிரச்னை ஏற்படலாம். சற்று விலகியிருப்பது நல்லது. உடல்நலனில் அக்கறை தேவை. சூரியனால் கண்நோய் ஏற்பட வாய்ப்புண்டு.
தொழில், வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். ஆக.31, செப்.1,2ல் பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் பிறக்கும். ஆக. 28க்கு பிறகு முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. அரசிடம் சலுகை எதிர்பார்க்க வேண்டாம்.
கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்வது நல்லது. பகைவர் வகையில் தொல்லை குறுக்கிடலாம். ஆக. 18,19,22,23ல் பண விரயம் ஏற்படலாம். செப்.14-க்கு பிறகு பொருளாதார வளம் சிறக்கும். விரிவாக்க முயற்சிக்கான வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருந்தாலும் சுக்கிரனால் ஆதாயம் கிடைக்கப் பெறுவர். திறமையை வெளிப்படுத்தி நிர்வாகத்தினரிடம் நற்பெயர் காண்பர். அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். செப். 2,3,4- ல் எதிர்பாராத நன்மை உண்டாகும்.
பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். ஆக. 28-க்கு பிறகு அரசு ஊழியர்கள், நெருப்பு தொடர்பான பணியாளர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இடமாற்ற பீதி செப்.2-க்கு பிறகு மறையும்.
கலைஞர்கள் -நற்பெயரும் புகழும் கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
அரசிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர். ஆக. 29,30- ல் மனக்குழப்பம் ஏற்பட்டு மறையும்.
மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. முயற்சிக்கான பலன் நிச்சயம் கிடைக்கும். விவசாயிகள் கிழங்கு வகைகள், நிலக்கடலை, மற்றும் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும்.
பெண்களால் குடும்பம் சிறந்து விளங்கும். அக்கம் பக்கத்தினர் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம். சுக்கிரனால் ஆடம்பர பொருள் வாங்க வாய்ப்புண்டாகும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணியில் பொறுமை தேவை.
கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆனாலும் திறமைக்கு ஏற்ற
கவுரவம் கிடைக்கும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.செப்.3,4-ல்அதிர்ஷ்டவசமாக வருமானம் கிடைக்கும். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருள் கிடைக்கப்பெறலாம். சகோதரிகளிடம் உதவி கிடைக்கும்.
நல்ல நாள்: ஆக.17, 20, 21, 24, 25, 31,
செப். 1, 2, 3, 4, 10, 11, 12, 13, 16
கவன நாள்: செப்.5, 6- சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: -4, 8
நிறம்: பச்சை, மஞ்சள்
பரிகாரம்
* நவக்கிரகங்களில் புதனுக்கு அர்ச்சனை
* வெள்ளியன்று அம்மனுக்கு நெய் தீபம்
* ஞாயிறு ராகுகாலத்தில் பைரவர் வழிபாடு