பதிவு செய்த நாள்
17
ஆக
2017
09:08
புதனை ஆட்சி நாயகனாக கொண்ட கன்னி ராசி அன்பர்களே!
சனி, ராகு இருவரும் மாதம் முழுவதும் நற்பலன் வாரி வழங்குவர். செவ்வாய் ஆக. 21- வரையும், புதன் செப். 2-வரையும், சுக்கிரன் ஆக. 21க்கு பிறகும் சாதகமான பலன் கொடுப்பர். பொருளாதார வளம் சிறக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டாகும்.
சமூகத்தில் மதிப்பு உயரும். சூரியனால் அவ்வப்போது பணவிரயம் ஏற்படலாம்.
குருபகவான் உங்கள் ராசியில் இருப்பதால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். பணியாளர்கள் பணியில் அடிக்கடி குழப்பம் நேர்ந்திருக்கலாம். இந்நிலையில், செப்.2-ல் குருபகவான் 2-ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான அமைப்பாகும். இதுவரை வாழ்வில் குறுக்கிட்ட இடர்பாடு அனைத்தும் மறையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்கும். ஆக.21-க்கு பிறகு வருமானம் அதிகரிக்கும். ஆக.24,25ல்பெண்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆக.20,21ல் உறவினர்களால் நன்மை உண்டாகும். அதே நேரம் ஆக.31, செப்.1,2ல் அவர்கள் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டியதிருக்கும்.
ஆக.28-க்கு பிறகு செவ்வாயால் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் குறுக்கிடலாம். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்தவும்.தொழில், வியாபாரத்தில் சனி பகவானால் வளர்ச்சி உண்டாகும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனத்தில் லாபம் அதிகரிக்கும். செப்.2-க்கு பிறகு படிப்படியாக பணிச்சுமை அதிகரிக்கும். எதிரிகளின் தொல்லை அவ்வப்போது தலைyUகலாம்.
ஆக.22,23,26,27,28-ல் சந்திரனால் தடைகள் ஏற்படலாம் கவனம். செப்.5,6-ல் எதிர்
பாராத வகையில் பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் உயர்ந்த நிலையை அடைவர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஆக.28-க்குள் கேட்டு பெற்று கொள்வது
நல்லது. ஆக.18,19 செப்.14,15ல் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. செப்.2- வரை அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். அதன் பின் பணியில் பொறுமை தேவைப்படும்.
கலைஞர்களுக்கு - எதிரி தொல்லை, அவப்பெயர், போட்டி முதலியன ஆக.21-க்கு பிறகு மறையும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் முன்னேற்றமான பலனைக் காணலாம். ஆக.
28-க்கு பிறகு சிரத்தை எடுத்து முன்னேற வேண்டியதிருக்கும். செப். 3,4-ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்- கல்வியில் சிறந்து விளங்குவர். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். செப்.2-க்கு பிறகு சிரத்தை எடுத்து படிப்பது அவசியம். குரு பலத்தால் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் உதவிகரமாக இருக்கும்.
விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கப் பெறுவர். எள், கரும்பு, கோதுமை, பழவகை பயிர்கள் மூலம் அதிக வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரத்தில் முடிவு சாதகமாக அமைய வாய்ப்புண்டு.
பெண்களுக்கு- குடும்பத்தாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். ஆக.21-க்கு பிறகு அக்கம்பக்கத்தினருடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். பணிக்குச் செல்லும் பெண்கள் திடீர் இட,பணிமாற்றத்திற்கு ஆளாவர். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். அதிகாரிகளின் ஆதரவால் ஆக.29,30- ஆகியவை சிறப்பான நாட்களாகஅமையும்.புத்தாடை
அணிகலன்கள் சேர வாய்ப்புண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து உதவி வந்து சேரும்.
செப்.7,8,9-ல் குடும்பத்துடன் விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதர வழியில் நன்மையை எதிர்பார்க்கலாம்.
நல்ல நாள்: ஆக. 18, 19, 20, 21, 24, 25, 29, 30, செப்.5, 6, 7, 8, 9, 14, 15, 16
கவன நாள்: செப்.10, 11- சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: -1,7
நிறம்: நீலம், கருப்பு
பரிகாரம்
* தினமும் காலையில் சூரிய தரிசனம்
* செவ்வாயன்று துர்க்கை நெய்விளக்கு
* வெள்ளியன்று லட்சுமிக்கு அர்ச்சனை