பதிவு செய்த நாள்
17
ஆக
2017
10:08
சுக்கிரனை ஆட்சி நாயகனாக கொண்ட துலாம் ராசி அன்பர்களே!
சூரியன், புதன் மாதம் முழுவதும் நன்மை தருவர். ஆக.28- வரை செவ்வாய் சாதக பலனை கொடுப்பார். அதன் பின் அவரால் நன்மை உண்டாகாது. சுக்கிரன் தற்போது 9-ம் இடத்தில் இருந்து நன்மை தந்து கொண்டிருக்கிறார்.
அவர் ஆக.21-ல் கடக ராசிக்கு செல்கிறார். இதுவும் சிறப்பானது அல்ல. ஆனால் செப்.15ல் சிம்ம ராசிக்கு செல்வதால் அதன் பின் நன்மை அதிகரிக்கும். பொருளதாரம் எந்த விதத்திலும் குறையாது. முயற்சியில் இருந்து வந்த தடைகள் விலகும். சமூக மதிப்பு சீராக இருக்கும்.
குருபகவான் இது வரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருந்து, பல்வேறு இடையூறுகளை கொடுத்திருப்பார். பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம். செப்.2-ல் குரு பகவான் உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார் இதுவும் சிறப்பான இடம் அல்ல. குரு1-ம் இடத்தில் இருக்கும் போது கலகம், விரோதம் குறுக்கிடலாம். இருந்தாலும் குருபகவானின் அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளன.
குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். அரசு வகையில் அனுகூலத்தை எதிர் பார்க்கலாம். மாதத் தொடக்கத்தில் சுக்கிரனால் குடும்பத்தில் நன்மை அதிகரிக்கும். வருமானம் உயரும். செப். 2- வரை புதனால் பெண்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். ஆக. 22,23ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். செப்.3,4-ல் அவர்கள் வகையில் பிரச்னை குறுக்கிடலாம். சற்று ஒதுங்கி இருப்பது நல்லது.
ஆக.26,27,28ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரி வழியில் உதவி கிடைக்கும். ஆக.28-க்கு பிறகு புதிய வீடு-, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். செவ்வாயால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது
சற்று கவனம் தேவை.
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். அரசிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். ஆக. 21-க்கு பிறகு தொழிலில் லாபம் அதிகரிக்கும். கேதுவால் சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கலாம். சற்று கவனம் தேவை.
ஆக. 24,25,29,30ல் சந்திரனால் தடைகள் ஏற்படலாம். செப். 7,8,9-ல் திடீர் வருமானம் அதிர்ஷ்டவசமாக கிடைக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.
பணியாளர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடை ஏதும் இருக்காது. அரசு
ஊழியர்களுக்கு கோரிக்கை நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். ஆக.28-க்கு பிறகு பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள்
சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். ஆக.20,21ல் கூடுதலான நன்மையை எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
கலைஞர்கள்- புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். புகழ், பாராட்டுக்கு குறைவிருக்காது. எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசனையில் ஈடுபடுவீர்கள்.
ஆக.21-க்கு பிறகு எதிரிகளால் தொல்லை ஏற்படலாம். போட்டிகள் அதிகரிக்கும்.அரசியல் வாதிகள், பொது நல சேவகர்கள் ஆக.28க்கு பிறகு சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவி தேடி வரும்.
மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தொய்வு நிலை மாறும். புதன் சாதகமாக இருப்பதால் கல்வி வளர்ச்சி உண்டாகும். போட்டி பந்தயத்தில் ஈடுபட்டு வெற்றி காண்பர்.
விவசாயிகள்- எதிர்பார்த்த மகசூலை பெறலாம். மஞ்சள், கேழ்வரகு, சோளம் காய்கறி,
பழவகைகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். ஆக.28-க்கு பிறகு சொத்து வாங்க யோகமுண்டு. வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும்.
பெண்களால் குடும்ப வாழ்வு சிறக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஆக.31,செப்.1,2- ஆகிய நாட்கள் மகிழ்ச்சி மிக்கதாக அமையும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கி மகிழலாம். பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கப் பெறலாம். செப்.10,11-ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரர் வழியில்
உதவி கிடைக்கும்.
நல்ல நாள்: ஆக.20, 21, 22, 23, 26, 27, 28, 31 செப்.1, 2, 7, 8, 9, 10, 11, 16
கவன நாள்: ஆக.17, செப்.12, 13 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: -4, 5
நிறம்: பிரவுன், சிவப்பு
பரிகாரம்
* சனிக்கிழமையன்று அனுமனுக்கு தீபம்
* நவக்கிரகத்தில் சனிபகவானுக்கு அர்ச்சனை
* பவுர்ணமியன்று சத்தியநாராயணர் வழிபாடு.