மானாமதுரை, மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சியில் வள்ளி, தெய்வானையுடனான முருகப் பெருமான் கோயில் உள்ளது. இந்தக்கோயிலில் வருடந்தோறும் வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனிஉத்திரம், ஆடிகார்த்திகை போன்ற விழாக்கள் நடைபெறும். ஆடிக்கார்த்திகையான நேற்று நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் 501 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை ஒட்டி முருகனுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. திருவிளக்கு பூஜையில் வெள்ளிக்குறிச்சியைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருப்பணிக் குழுத்தலைவரான ராமகிருஷ்ணன் மற்றும் வெள்ளிக்குறிச்சி கிராமத்தினர், இளைஞர்கள் செய்து இருந்தனர்.