மதுரை மீனாட்சி அம்மன் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2017 04:08
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
விழாவை முன்னிட்டு சுவாமி சன்னதி முன் 62 அடி உயர தங்கக்கொடிமரம் முன் சர்வ அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் சுவாமி எழுந்தருளினர். யாகசாலை பூஜைகளுக்கு பின்னர் கொடிக்கு பூஜைகள், கொடிமரத்திற்கு பாலாபிஷேகம் நடந்தது. பின் வேத மந்திரம் முழங்க, மங்கள நாதஸ்வர மேளம், சங்குகள் ஒலிக்க ஆவணி மூல திருவிழா கொடியேற்றப்பட்டது. கொடிமரத்திற்கு மலர்கள் தூவி, சர்வ தீபாராதனைகள் காண்பிக்கப் பட்டன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
செப்.,5 ம் தேதி வரை நடைபெறும் விழாவில், சுவாமி தினமும் காலை, மாலையில் நான்கு ஆவணி மூல வீதிகளில் பஞ்ச மூர்த்திகளுடன் திருவீதி உலா வந்தும், மண்டகப்படிகளில் எழுந்தருளியும் அருள்பாலிக்கின்றனர். ஆக.31ம் தேதி சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.