ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் சவுந்திரநாயகி சமேத நாகநாத சுவாமி கோயிலில், சிவதாமோதரனின் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் மங்களநாதர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், திருக்கழுக்குன்றம் சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் திருக்கூட்டத்தை சேர்ந்த சிவ தாமோதரனின் திருவாசகமுற்றோதல் நடந்தது. இதில் சிவனடியார்கள் பலர் பங்கேற்றனர். இதில் பக்தி பரவசத்தில் பாட்டுக்கு பக்தர்கள் எழுந்து நடனமாடினர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.