பதிவு செய்த நாள்
22
ஆக
2017
11:08
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயில் ஆண்டு முழுவதும் விழாக்கோலம் பூணுகிறது.ஆவணி மூலத்திருவிழா நேற்று காலையில் சுவாமி சன்னதியில் கொடியேற்றத்துடன்துவங்கியது. 11 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் 4ம் திருநாளான வியாழன்று சுவாமி, அம்பாள், விநாயகர்,
சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் வீதியுலா நடக்கிறது. 29ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு கருவூர் சித்தர் நான்கு ரதவீதிகளில் வலம் வருவார். பதிணென் சித்தர்களுள் ஒருவர் கருவூர் சித்தர். இவர் செய்த கடுந்தவத்திற்கு அஷ்டசித்திகளும் கிடைத்தன. அவர் எப்போது சிவபெருமானைக் காண வேண்டுமென்று விரும்புகிறாரோ, அப்போதெல்லாம் சிவபெருமான் அவருக்குக் காட்சியளிக்க வேண்டும் என்ற வரத்தையும் பெற்றிருந்தார். நெல்லையப்பர் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக காத்திருப்பார். அப்போது வழிபாடு நடந்ததால், சுவாமி காட்சி தரவில்லை. இதனால் வெகுண்டெழுந்த கருவூர் சித்தர், "நெல்லையப்பர்கோயிலில் எருக்கும் குருக்கும் எழுக என சாபமிட்டுவிட்டு நடை பயணத்தில் மானூரில் இருக்கும்அம்பலவாணமுனிவரை சந்திக்க சென்றுவிடுவார். இதற்கு மறுநாள் ஆக 30ல் இரவு ஒரு மணியளவில்,நெல்லையப்பர் சுவாமி, சந்திரசேகரராகவும், காந்திமதியம்மை, பவானிஅம்பாளாகவும், பாண்டியராஜா, சண்டிகேஸ்வரர், தாமிரபரணி, அகஸ்தியர், குங்குலிய நாயனார் ஆகியோருடன் பல்லக்கில் சங்கரன்கோவில்ரோட்டில் இருக்கும் மானூர் அம்பலவாணமுனிவரின் இருப்பிடம் செசன்றடைகின்றனர். 31ம் தேதிகாலையில் அங்கு சிவனை கண்ட, கருவூர் சித்தரும், அம்பலவாணமுனிவரும் மகிழ்ச்சியடையவர். 31ம் தேதி காலை 7.30 மணிக்கு அங்கு வரலாற்றுப்புராண பாடல் நிகழ்வும் சுவாமிக்கு சித்தரிடம் இருந்து சாப விமோசனமும் கிடைக்கிறது. அதன் பிறகு சுவாமி, அம்பாள் நெல்லையப்பர் கோயில் திரும்புவர்.இந்த 11 நாள் திருவிழாவிற்காக நெல்லையப்பர் கோயில் தற்போது தயாராகிவருகிறது.