சபரிமலை: கர்நாடக இசைக் கலைஞரும், பின்னணி பாடகருமான ஜேசுதாஸ் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தார்.சபரிமலையில் ஆவணி மாத பூஜைகள் நடக்கின்றன. நேற்று காலை ஜேசுதாஸ், மனைவி பிரபாவுடன் இருமுடி கட்டு ஏந்தி சன்னிதானம் வந்தார். தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்றனர். ஸ்ரீகோயில் முன் வந்த அவர்களுக்கு பூஜாரி பிரசாதம் கொடுத்தார். கணபதி கோயிலில் வழிபாடு நடத்திய பின் இருமுடி கட்டு அவிழ்த்து, ஐயப்பனுக்கு நெய் அபிஷேகத்திற்காக கொடுத்தார். மாளிகைப்புறம் கோயிலில், நாக தோஷம் தீர்ப்பதற்காக வீணை வாசிப்போரின் இசையை ரசித்தார்.