ராமநாதபுரம் ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் ருத்ர பஞ்சாட்சர யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2017 12:08
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டினம் சவுபாக்ய நாயகி சமேத ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் ருத்ர பஞ்சாட்சர யாகம் நடந்தது. வெளிப்பட்டினம் ஆயிர வைசிய மகாஜன சபையின் சவுபாக்ய நாயகி சமேத ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் ருத்ர பஞ்சாட்சர யாகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு மங்கள அனுக்ஞை, விநாயகர் பூஜை, புண்ணியாஹா வாஜனம், மகாகணபதி ஹோமம் ஆரம்பமாகியது. காலை 11:30 வரை ருத்ர பஞ்சாட்சர யாகம் , சமக தாரா ஹோப பூர்ணாகுதி, தீபாரதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு 2ம் கால ஹோம பூஜைகள், 6:10 மணிக்கு மஹா பூர்ணாகுதி, தீபாரதனை, இரவு 7 :00 மணிக்கு கடம் புறப்பாடு, சுவாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. 7:50 க்கு திருமுறை வேத பாராயணம், தீபாரதனை நடந்தது. அன்ன தானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.