Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தூய விண்ணரசி அன்னை ஆலய ... தேவி கிருஷ்ணமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா தேவி கிருஷ்ணமாரியம்மன் கோவிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூரில் ஊஞ்சல் ஊற்சவம்: மழையிலும் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2017
04:08

செஞ்சி: தொடர் மழையிலும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் வழக்கம் போல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Default Image

Next News

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்று காலை அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. நேற்று இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் இருந்த அம்மனை கோவிலில் இருந்து வாத்தியங்கள் முழுங்க ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு நடந்த ஊஞ்சல் உற்சவத்தின் போது கூடியிறுந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரதீபம் ஏற்றி வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர்.

கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இதில் விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன், எஸ்.பி., ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்து சமய உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் பிரகாஷ், திருவண்ணாமலை மோகன் அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ், மற்றும் அறங்காவலர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர். செஞ்சி டி. எஸ்.பி., ரவிச்சந்திரன் மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்கினர்.  மேல்மலையனூர் உட்பட விழுப்புரம் மாவட்டத்தில் பல இடங்களிலும் தொடர் மழை பொழிந்து வந்த நிலையிலும் வழக்கம் போல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவத்தில் ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar