செஞ்சி : வடவெட்டி அங்காளம்மன் கோவிலில், ஆவனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மேல்மலையனுார் அடுத்த வடவெட்டி ரங்கநாதபுரம் அங்காளம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்று காலை வினாயகர், பெரியாழி, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். இரவு 8:00 மணிக்கு கலை நிகழ்ச்சியும், 10:30 மணிக்கு அம்மமனுக்கு ஊஞ்சல் தாலாட்டும், மகா தீபாராதனையும் நடந்தது.