மேலுார்: மதுரையில் நடைபெறும் ஆவணி மூலத்திருவிழாவிற்கு, மேலுார் அருகே திருவாதவூரில் இருந்து மாணிக்கவாசகர் ஆக.31ல் மதுரைக்கு புறப்படுகிறார். செப்.1ல் நரியை பரியாக்கும் திருவிளையாடல் நிகழ்ச்சியிலும், செப்.2ல் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.செப்.3ல் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியுடனும், செப்.4 மற்றும் 5 ஆகிய இரு தினங்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரருடன் சேர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். செப். 5, 6, 7 ஆகிய மூன்று நாட்கள் தல்லாகுளம், உத்தங்குடி ஆகிய மண்டகப்படிகளில் இருந்து விடைபெறுதல் நிகழ்ச்சியும், செப்.8ல் திருமோகூரிலும், செப்.9ல் இடையபட்டி கிராமத்திலும் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். செப்.10ல் திருவாதவூர் கோவிலை வந்தடைகிறார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் நடராஜன், பேஸ்கர் திரவியம் குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.