திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் கண்காணிப்பு கேமராக்கள் இயங்க துவங்கியது. திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. வெள்ளி, செவ்வாய் நாட்களிலும் சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் பலஆயிரம் பக்தர்கள் கூடுவார்கள். முதல் நாள் இரவு தங்கி, மறுநாள் காலை சுவாமியை வணங்குவது சிறப்பாகும். சிவகங்கை, புதுக்கோட்டை, பட்டுகோட்டை பல பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று கோயில் மண்டபத்தில் தங்குவார்கள். பக்தர்களிடம் திருட்டுக்கள் அதிகமாக நடந்ததால் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு சிவகங்கையை சேர்ந்த ஒரு பெண்ணிடம் தங்க தாயத்து திருடு போனது. கண்காணிப்பு கேமராவை பார்த்த போது தெளிவாக தெரியவில்லை. கூடுதலாக கேமராக்கள் இல்லாததால் திருடர்களை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து சில தினங்களுக்கு முன்பு தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இச் செய்தியின் எதிரொலியாக பழுதான கேமராக்கள் சரி செய்யப்பட்டு, கூடுதல் கேமராக்கள் வைக்கபட்டது.