பதிவு செய்த நாள்
04
செப்
2017
11:09
செங்கல்பட்டு: திருவடிசூலம் கிராமத்தில், அஷ்ட நாக ங்கள் புடை சூழ, தேவி கரியநாகமாரி மஹா கும்பாபிஷேக விழா, நேற்று விமரிசையாக நடை பெற்றது. செங்கல்பட்டு அடுத்த, திருவடிசூலம் கோவில்புரத்தில், ஆதிபரமேஸ்வரி தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இவ்வளாகத்தில், அஷ்ட நாக ங்கள் புடை சூழ அன்னை தேவி கரியநாகமாரிக்கு புதிதாக கோவில் கட்டும் பணி, ஆறு மாதங்களுக்கு முன் துவங்கி, சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து, நேற்று காலை , 10:25 மணியிலிருந்து, சிறப்பு அபிஷேகம், யாகம் நடந்தது.
11:45 மணிக்கு, மருளாளர் மதுரை முத்து சுவாமிகள், கோபுர கலசங்களுக்கும், தேவி கரியநாகமாரிக்கும் புனித நீரூற்றி, மஹா கும்பாபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து, ஆதிபரமேஸ்வரி தேவி கருமாரியம்மன், தேவி கரியநாகமாரிகள் குறித்து, இணையதளம் மற்றும் முகநுால் பக்கம் வெளியிடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் இன்றி, பல மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்திருந்தனர். செங்கல்பட்டு தாலுகா போலீசார், 20க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.