திருப்பதி: ஆகஸ்ட் மாதத்தில், திருமலை தேவஸ்தானத்திற்கு, உண்டியல் மூலம், 93 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.ஆகஸ்ட் மாதத்தில், திருமலை ஏழுமலையானை, 23 லட்சம் பேர் தரிசனம் செய்தனர்; திருமலையில், 52 லட்சம் பேர் இலவச உணவு சாப்பிட்டனர். 11 லட்சம் பேர் ஏழுமலையானுக்கு தலைமுடி காணிக்கை செலுத்தினர்; ஏழுமலையான் உண்டியல் மூலம், 93 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.இத்தகவலை, திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.