பதிவு செய்த நாள்
04
செப்
2017
12:09
சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கரிகால சோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இக்கோயில் கும்பாபிேஷக விழா ஆக., 27 கணபதி பிரார்த்தனையுடன் துவங்கியது. ஆக., 28 காலை 8:15 மணிக்கு சாந்தி ஹோமம், ஆக., 30 காலை 9:15 மணிக்கு பிரஸன்னாபிேஷகம் நடந்தது. ஆக., 31 மாலை 6:30 மணிக்கு முதல்யாக சாலை பூஜை துவங்கியது. செப்., 1 காலை 8:30 மணிக்கு இரண்டாம் காலயாக சாலை பூஜை, இரவு 9:10 மணிக்கு மூன்றாம் காலயாகசாலை பூஜை நடந்தன. செப்., 2 காலை 8:30 மணிக்கு நான்காம்கால யாகசாலை பூஜை, மாலை 5:30 மணிக்கு ஐந்தாம்கால யாகசாலை பூஜை நடந்தன. செப்., 3 காலை 10:45 மணிக்கு கோபுர விமானங்களுக்கும், தொடர்ந்து மூலஸ்தான விமானத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. மாலை 3:45 மணிக்கு மகாஅபிேஷகம், மாலை 6:30 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 7:15 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடந்தன. ஏற்பாடுகளை தேவஸ்தான அலுவலர்கள், நகரத்தார்கள், விழாக்குழுவினர் செய்தனர்.