பதிவு செய்த நாள்
11
செப்
2017
11:09
திருப்பூர் : திருப்பூர் அருகே, ஒரே கல்லில் சிவபெருமான் காட்சியளிக்கும் வகையில், 17 அடி உயர சிவன் சிலையை, சிற்பிகள் உருவாக்கி உள்ளனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள திருமுருகன்பூண்டி முருகன் சிற்ப கலைக்கூடத்தை சேர்ந்த சிற்பிகள், 17 அடி உயரத்தில், 18 டன் எடையில், சிவபெருமான் சிலையை உருவாக்கியுள்ளனர். தலை பகுதியில், கங்கா தேவி காட்சியளிக்கும் வகையில் சிலை, அழகிய வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம், பீளமேடு சேரன் மாநகரில் உள்ள விநாயகர் கோவிலில், கார்த்திகை மாதம், இந்த பிரமாண்ட சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த சிலை, நேற்று லாரியில் கோவைக்கு அனுப்பப்பட்டது.சிற்பி சண்முகவேல் கூறுகையில், ஒரே கல்லில், சிவன் காட்சியளிக்கும் வகையில், 18 டன் எடையில், 25 பணியாளர்களுடன் உருவாக்கினோம். இப்பணி, ஓராண்டாக நடந்தது. சிலை, 17 அடி உயரம், 10 அடி அகலம், சுற்றளவு, 25 அடி என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.