பதிவு செய்த நாள்
11
செப்
2017
12:09
கிருஷ்ணகிரி : கோவில் விழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், எம்.சி.பள்ளி கிராமத்தில் உள்ள வீரபத்ர சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை, 8:00 மணிக்கு, உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை, கரகாட்டம், சுவாமி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.காலை, 9:00 மணிக்கு, எருதின் தலை மீது தேங்காய் உடைத்தல், செம்மறி ஆட்டின் தலை மீது தேங்காய் உடைத்தல், பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலை மீது, தேங்காய்கள் உடைக்கப்பட்டன. 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.