பதிவு செய்த நாள்
12
செப்
2017
01:09
கொடுமுடி: மகுடேஸ்வரர் கோவிலில், சத்ரு சம்ஹார யாகம், நேற்று தொடங்கியது. பிரசித்தி பெற்ற, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், உலக நன்மை, மக்கள் நலன் கருதி, சத்ரு சம்ஹார யாக தொடக்க விழா, கடந்த, 8ல் தொடங்கியது. செப்.,9ல் ருத்ர யாகம் மற்றும் முதற்கால யாக பூஜை நடந்தது. இதை தொடர்ந்து, இரண்டாம் கால, மூன்றாம் கால யாக பூஜைகள் நேற்று நடந்தன. இன்று நான்காம் கால யாக பூஜை, மஹா அபிஷேகம் சிறப்பு அர்ச்சனை நடக்கிறது. இதை தொடர்ந்து, கோவிலில் உள்ள முருகப்பெருமான் சன்னதியில், சத்ரு சம்ஹார ஹோமம், சிறப்பு வழிபாடு மாலையில் நடக்கிறது. இதில் பக்தர்கள் பங்கேற்க, கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.