பதிவு செய்த நாள்
13
செப்
2017
10:09
பழநி: குருபெயர்ச்சியை முன்னிட்டு, பழநி பெரியாவுடையார் கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்புஅபிஷேக பூஜைகள் நடந்தது. பழநி சண்முகா நதிக் கரையில் அமைந்துள்ள பெரியாவுடையார் கோயிலில் குருபகவானின் அதிதேவர்களாகிய சுயம்பு மூர்த்தியாக சிவப்பெருமான், பிரம்மா, தட்சிணாமூர்த்தி ஆகிய மூன்று தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர். நேற்று திருக்கணிதப்படி குருபகவான் கன்னிராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதனை முன்னிட்டு பெரியாவுடையார், பிரம்மா, தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. விஷ்ணு, ருத்ரர், கன்னிமார்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை குருபெயர்ச்சி வழிபாட்டுகுழு நிர்வாகிகள் முருகேசன், சக்திவேல், வாசு செய்தனர்.