பதிவு செய்த நாள்
13
செப்
2017
12:09
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமர கோட்டத்தில், ஆவணி மாத கிருத்திகையையொட்டி, சொற்பொழிவு நடந்தது. காஞ்சிபுரத்தில், திருக்குமரகோட்ட திருக்கோயில் வழிபாட்டுக்குழு, இயங்கி வருகிறது. இக்குழுசார்பில், ஒவ்வொரு கிருத்திகையன்றும், காஞ்சிபுரம் குமரகோட்டத்தில், கிருத்திகை சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 266வது, நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், கச்சபேஸ்வரர் கோவில் ஓதுவார்மூர்த்தி, த.தமிழ்ச்செல்வன், கார்த்திகை பெண்கள் போற்றிய கந்தவேள்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். இதில், ஆன்மிக அன்பர்கள் பங்கேற்றனர்.