வடமாநிலங்களில் நவராத்திரிக்கு முதல் நாளே சின்னச் சின்ன மண்தொட்டியில் நவதானியங்களைக் கலந்து பாலிகை வளர்ப்பர். ஒன்பது நாட்களும் தேவி பூஜையின் போது அம்பிகையின் முன் அந்தப் பாலிகைத் தொட்டியை வைப்பர். விஜயதசமியன்று அதை எடுத்து நீர்நிலைகளில் கரைப்பதை ஓர் ஐதிகமாகக் கடைபிடிக்கிறார்கள்.