கேரள மாநிலம், எர்ணா குளத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பரவூர் என்ற இடத்தில் வெண்தாமரை பூத்துக்குலுங்கும் சதுரமான ஒரு குளத்தின் நடுவில் உள்ளது மூகாம்பிகா என்னும் சரஸ்வதி கோயில். சிறிய பாலத்தின் மீது நடந்து சென்று கோயிலின் கருவறையை அடையலாம். இங்கு இரவு நடைசாத்தும் முன் மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒருவகை கஷாயம் பிரசாதமாகத் தரப்படுகிறது. வயிறு உபாதையால் பாதிக்கப்பட்டவர்கள் இதை அருந்தினால் குணம் கிட்டும் என்பது நம்பிக்கை.