பாலக்காடு அருகிலுள்ள கொடுந்திரப்புள்ளி என்ற ஊரில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு சரஸ்வதி பூஜையன்று, நவமி விளக்கு என்ற விழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கோயில் முழுக்க விளக்கேற்றி சுவாமிக்கு விசேஷ வழிபாடுகள் நடத்தப்படுகிறது. அன்று ஊர் முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஜொலிக்கும். யானைகளும் தெருவில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும்.