பதிவு செய்த நாள்
14
செப்
2017
12:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதில், 80 லட்சத்து, 91 ஆயிரம் ரூபாய் இருந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பவுர்ணமி தினத்தில், லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இவர்கள் கோவிலில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வது வழக்கம். மாதந்தோறும் பவுர்ணமி முடிந்ததும், உண்டியல்கள் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் தலைமையில் நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில், காணிக்கையாக, 80 லட்சத்து, 91ஆயிரத்து, 871 ரூபாய் இருந்தது. மேலும், 308 கிராம் தங்கம், 1,065 கிராம் வெள்ளி இருந்தது. இவை, கோவில் நிர்வாக வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டன.