பழநியில் ரோப்கார் நிறுத்தம்: வின்ச் ல் 3 மணிநேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2017 11:09
பழநி; ஞாயிறு விடுமுறை தினத்தில் பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் ரோப்கார் நிறுத்தம் காரணமாக வின்ச் ஸ்டேஷனில் மூன்று மணிநேரம் காத்திருந்தனர். தமிழக கோயில்களில் பழநி மலைக்கோயில் தான் ரோப்கார், வின்ச் கள் இயக்கப்படுகிறது. இதன்காரணமாக சிறுவர்கள் முதல் பெரியோர்கள் ரோப்கார் மற்றும் வின்ச் களில் விரும்பிபயணம் செய்கின்றனர். ரோப்கார் ஆண்டுபராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று ஞாயிறுவிடுமுறை தினத்தில் குவிந்த பக்தர்கள் வின்ச் களில் பயணம் செய்ய அந்த ஸ்டேஷனில் மட்டும் 3 மணிநேரம் வரை காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர். அங்கு பக்தர்கள் பொதுதரிசன வழியில் 2 மணிநேரம் காத்திருந்து மூலவரை தரிசனம்செய்தனர். இரவு தங்கரதப் புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
பக்தர்கள் உஷார்: வின்ச் மூலம் மலைக்கு செல்ல தலா ஒருவருக்கு ரூ.10, சிறப்புவழி ரூ.50 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் ரோப்கார் நிறுத்தம் காரணமாக வின்ச்சில் குவியும் பக்தர்களிடம் சிலர் மலைக்கோயிலுக்கு விரைவில் அழைத்து செல்வதாக கூறி ஒரு டிக்கெட்டிற்கு ரூ.100 வரை கூடுதலாக வசூல்வேட்டையில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு அலுவலர்கள் உதவிசெய்வதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கோயில்நிர்வாகம், அடிவாரம் போலீசாரும் இணைந்து பக்தர்களை ஏமாற்றும் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.