Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுராவில் ஆதரவற்ற பசுக்களை ... காவிரி துலாக்கட்டத்தில் தருமபுரம் ஆதின குருமகா சன்னிதானத்திற்கு புஷ்பாஞ்சலி காவிரி துலாக்கட்டத்தில் தருமபுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி, ஆவணி திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
ஆடி, ஆவணி திருவிழா நிறைவு

பதிவு செய்த நாள்

18 செப்
2017
12:09

ஆர்.கே.பேட்டை : ஆடியில் துவங்கிய அம்மன் கோவில் திருவிழா ஆவணி மாதத்தில் நிறைவடைந்தது. எட்டு வாரம் நடந்த கொண்டாட்டத்தின்நிறைவாக, ஜாத்திரை உற்சவத்தின் போது, பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து வலம் வந்தனர். ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழா களைகட்டும். அதை தொடர்ந்து ஆவணி மாதத்தில், கிராம தேவதையான அம்மன் கோவில்களில் ஜாத்திரை திருவிழா நடக்கும். கடந்த எட்டு வாரங்களாக, ஆர்.கே.பேட்டை, வங்கனுார், அத்திமாஞ்சேரிபேட்டை, பொதட்டூர்பேட்டை, ஸ்ரீகாளிகாபுரம், ராஜாநகரம், கிருஷ்ணாகுப்பம் உள்ளிட்டசுற்றுவட்டார கிராமங்களில் களைகட்டிய உற்சவங்கள் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. நிறைவு நாள் உற்சவத்தில், அம்மன் வீதியுலா நடந்தது. இதில், பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனாக, பார்வதி, பரமசிவன், அகத்தியர், முருகன், விநாயகர், குறத்தி வள்ளி, நாரதர் என பல்வேறு வேடம் அணிந்து வலம் வந்தனர்.

ஆடி மாதத்தில், செவ்வாய், வெள்ளிக்கிழமையில் மட்டும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்து வந்தது. ஆவணியில், மூன்று மற்றும் நான்காம் வாரம் என தொடர்ந்து பத்து நாட்களுக்கும் மேலாக, தினசரி பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா எழுந்தருளினார். கடந்த செவ்வாய் கிழமை அம்மையார்குப்பத்திலும், புதன் கிழமை பொதட்டூர்பேட்டையிலும், வியாழக்கிழமை சொரக்காய்பேட்டையிலும், அம்மனுக்கு கும்பம் படைக்கப்பட்டது. ஜாத்திரை திருவிழாவை ஒட்டி, ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகள், அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பலியிடப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar