* இளம் மூங்கில் சுலபமாக வளையும். முற்றிய மூங்கில் வளைத்தால் ஒடிந்து விடும். இளமை காலமே பக்தியில் ஈடுபடுவதற்கான இனிய காலம். * வெளியுலகில் கடவுளைத் தேடுபவன் அறியாமையில் கிடக்கிறான். தனக்குள்ளேயே கடவுள் இருப்பதை அறிபவனே அறிவில் சிறந்தவன். * ஆணவம் எளிதில் நம்மை விட்டு போவதில்லை. உடல் என்பது இருக்கும் வரை அதன் அடையாளம் சிறிதளவாவது இருக்கவே செய்யும். * தண்ணீரில் இட்ட கோடு போல, வந்த வேகத்தில் கோபத்தை மறந்து விட வேண்டும். அதுவும் பிறர் நலனுக்காக கோபம் வெளிப்பட வேண்டும். * நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் உண்டு. நம்பிக்கை இல்லாதவனுக்கு எதுவுமே இல்லை. கடவுளை முழுமையாக நம்பி விட்ட பிறகு யாரையும் நம்பத் தேவையில்லை. * தன்னை மட்டும் திறமைசாலியாக கருதுவது மூடத்தனம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான திறமை இருக்கவே செய்யும். * விடாமுயற்சியுடன் மனதை அடக்கியவர்களால் மட்டுமே, தனிமையிலும், கூட்டத்திலும் கடவுளை சிந்திக்க முடியும். * உண்மையை உணர்த்தும் சாஸ்திர நூல்களை படிப்பதை விட கேட்பது நல்லது. அனுபவத்தின் வாயிலாக உண்மையை அறிவது இன்னும் நல்லது. சொல்கிறார் ராமகிருஷ்ணர்.