மகாளய அமாவாசை : காவிரி துலாக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2017 10:09
மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம் விழா 8ம் திருநாள் மற்றும் மகாளய அமாவாசை தினமான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராராடிவருகின்றனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகாபுஷ்கரம் விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 24ம் தேதிவரை நடைபெறுகிறது. இவ்விழாவி ல் கலந்துகொண்டு காவிரியில் புனிதநீராடினால் பாவங்கள் நம்மை விட்டு போவதுடன், மூன்றரைகோடி தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனை யடுத்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து, இன்று காலை 7:30 மணி வரை 8 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்கள் மயிலாடுதுறை காவிரி புஷ்கரத்தில் நீராடியுள்ளனர். மகா புஷ்கரம் விழவின் 8 ம் திருநாள் மற்றும் மகாளய அமாவாசையான இன்று அதிகாலை முதலே காவிரி புஷ்கரம் தீர்த்தத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி க ரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, புனிதநீராடி வருகின்றனர். மேலும் பக்தர்களின் எணணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனையடுத்து திருச்சி மண் டல ஐஜி.வரதராஜிலு தலைமையில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவிரி துலாக்கட்டத்தில் நாளை திருப்பதி ஜீயர் மற்றும் செங்கோல் ஆதினம் தலை மையில் பு+ஜைகள் நடைபெறுகிறது. அதனையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காலை 9மணிக்கு புஷ்கரத்தில் புனித நீராடுகிறார். இதனையொட்டி தமிழக அரசு நாகை மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவித்துள்ளது.