பதிவு செய்த நாள்
20
செப்
2017
11:09
பொன்னேரி; மகாளய அமாவாசையை முன்னிட்டு, பொன்னேரி ஆனந்தபுஷ்கரணி திருக்குளத்தில், முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நாளில் முன்னோரை நினைத்து வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். இந்நாளில் நம் முன்னோரை நினைத்து செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்காக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது. நேற்று மகாளய அமாவாசயை முன்னிட்டு, பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள ஆனந்தபுஷ்கரணி திருக்குளத்தில், அதற்கான பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. புரோகிதர்களிடம் தங்களது கோத்திரம், இறந்த தங்களது மூதாதையர்களின் பெயர்களை கூறி பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு சென்றனர். நேற்று அதிகாலை, 5:00 மணி முதல், பகல், 12:00 மணி வரை கோவில்மண்டபத்தில் கூட்டம் அலை மோதியது.