திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றத்தில், மகாளய அமாவாசையை முன்னிட்டு, ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய, திருக்குளத்தில் குவிந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் புனித நகரமாக திருக்கழுக்குன்றம் விளங்குகிறது. காசிக்கு சென்று வருவோர் திருக்கழுக்குன்றம் வந்து பின் ராமேஸ்வரம் செல்வர்.நான்கு வேதங்கள் போற்றும் நாயகனாக வேதகிரீஸ்வரர் விளங்குவதால் இவ்வூரில் உள்ள சங்கு தீர்த்த குளத்தில் நேற்று திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்று வட்டார கிராமத்தினர், தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்ய குவிந்தனர்.