Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாடலீஸ்வரர் கோவிலில் கால ... மயிலாடுதுறை காவிரி மகா புஷ்ரம் விழா: புனித நீராடிய தமிழக முதல்வர் மயிலாடுதுறை காவிரி மகா புஷ்ரம் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூரில் ஊஞ்சல் ஊற்சவம்: குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
மேல்மலையனூரில் ஊஞ்சல் ஊற்சவம்: குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

20 செப்
2017
03:09

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த மகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் வழக்கம் போல் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று மகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்று காலை அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. அன்று இரவு 11.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் இருந்த அம்மனை கோவிலில் இருந்து வாத்தியங்கள் முழுங்க ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு நடந்த ஊஞ்சல் உற்சவத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரதீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர்.

கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இதில் விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன், எஸ்.பி., ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்து சமய உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் பிரகாஷ், திருவண்ணாமலை மோகன் அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ், மற்றும் அறங்காவலர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர். செஞ்சி டி. எஸ்.பி., ரவிச்சந்திரன் மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்கினர். தமிழகத்தின் பல இடங்களிலும் கோவில்களில் விசேஷங்கள் நடந்து வந்த நிலையிலும் மேல்மலையனூர் கோவிலுக்கு வழக்கம் போல் பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar