சிலர் சரஸ்வதியின் முகத்தை மஞ்சளை அரைத்து செய்து வைப்பதுண்டு. கிராமங்களில் அம்பாளை செம்மண்ணில் செய்து வைப்பார்கள். இவ்வாறு வைத்தால் பூஜை முடிந்ததும், ஒரு மண்பானையில் தண்ணீர் எடுத்து, அதில் அம்பாளின் முகத்தைக் காட்ட வேண்டும். அம்பாள் முகம் அதில் பிரதிபலிக்கும் போது, அதை தரிசனம் செய்ய வேண்டும். இதன்பிறகு அந்த முகத்தை நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும்.பானையில், அம்பாள் முகம் பார்ப்பதால் அவள் மனம் குளிர்வாள் என்றும், நினைத்ததை நிறைவேற்றுவாள் என்பது ஐதீகம். அது மட்டுமல்ல! வீடுகளில் இதை தவறாமல் செய்தால், நாடெங்கும் பருவமழை போதுமான அளவு பெய்யும் என்பதும் நம்பிக்கை.