உயிர்கள் அனைத்தையும் படைத்தும் காத்தும் அருள்பவள் அம்பிகை. இப்பிரபஞ்சத்தை ஆளும் மகாராணி என்னும் பொருளில் அவளுக்கு மகாராக்ஞி என்னும் பெ<யரும் உண்டு. ராணியாக சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதால் சிம்ஹாசனேஸ்வரி என்றும் அழைப்பர். சிம்மாசனத்திற்கு நான்கு கால்கள் உண்டு. படைக்கும் பிரம்மா, காக்கும் விஷ்ணு, அழிக்கும் ருத்ரன், மறைக்கும் மகேஸ்வரன் ஆகி<ய நால்வரும் கால்களாக விளங்குகின்றனர். அந்தக்கால்கள்மீது சதாசிவமூர்த்தியே பீடமாக இருக்கிறார். அதன்மேல் அனுக்கிரக பீடம் என்னும் அருளல் பீடம் இருக்கிறது. அதற்கும் மேலே அம்பிகை பரமேஸ்வரியாக இருந்து அரசாட்சி நடத்துகிறாள்.