ஸ்ரீரங்கம் காவிரி புஷ்கரம்: 10ம் நாளில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2017 06:09
ஸ்ரீரங்கம்: காவிரி புஷ்கரம் விழாவின் 10ம் நாளில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
காவிரி புஷ்கரம் விழாவின் 10ம் நாளில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில், வீர லெட்சுமி இஷ்டி ஹோமம் நடைபெற்றது. விழாவில் தாயாருடன் ஆதிநாயக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காவிரி புஷ்கரம் விழாவில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றில் ஏராளமான பக்தர்கள்புனித நீராடிவழிபாடு செய்தனர்.