ராமேஸ்வரம், நவராத்திரி விழாவை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஸ்ரீ சக்கர பூஜை, அபிேஷகம் நடந்தது. ராமேஸ்வரம் கோயிலில் நவராத்திரி விழாவுக்காக செப்.,20ல் பர்வதவர்த்தினி அம்மனுக்கு திருகாப்பிடல் நிகழ்ச்சியுடன், விழா துவங்கியது. நேற்று அம்மன் சன்னதி அருகே அலங்கார கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை ஸ்ரீ சக்கரத்திற்கு (ராஜராஜேஸ்வரி அம்மன்) கோயில் குருக்கள் உதயகுமார் சிறப்பு பூஜை செய்து தீபாராதனை நடத்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நவராத்திரி விழா 2ம் நாளான நேற்று, பர்வதவர்த்தினி அம்மன் பக்தர்கள் பசி, பிணி நீக்கும் அன்னபூரணி அலங்காரத்தில் காட்சியளித்தார். அன்னபூரணி அம்மனுக்கு கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தினர்.