பதிவு செய்த நாள்
22
செப்
2017
12:09
முத்தியால்பேட்டை: முத்தாலம்மன் கோவிலில், நவராத்திரி உற்சவ விழா, நேற்று கோலாகலமாக துவங்கியது. காஞ்சிபுரம் அடுத்த நத்தப்பேட்டை- – முத்தியால்பேட்டை சாலையில், முத்தாலம்மன் கோவில் உள்ளது. இங்கு, நவராத்திரி உற்சவ விழா நேற்று, கோலாகலமாக துவங்கியது. துவக்க நாளான நேற்று, மாலை, ‘நவராத்திரி நாயகியார்’ தலைப்பில், கலைமாமணி ஸ்ரீகவி மற்றும் ஸ்ரீமதி கவிதாஸ்ரீ சொற்பொழிவு ஆற்றினர். அதை தொடர்ந்து, ஸ்ரீமதி சுசித்ரா குழுவினர் தமிழ் இசை பக்தி பாடல்களை பாடினர். இரண்டாவது நாளான, 22ம் தேதி சாரதா நம்பிஆரூரான் வழங்கும், ஆன்மிக சொற்பொழிவும். மூன்றாவது நாளான, 23ம்தேதி வித்யா வாணி சங்கீத வித்யாலயாவின் நாமசங்கீர்த்தனம். நான்காவது நாளான, 24ம் தேதி வீரமணி ராஜுவின் மெல்லிசை விருந்து. ஐந்தாவது நாளான செப், 25ம் தேதி ஸ்ரீமதி கல்யாணி மார்க்கப்பந்து குழுவினரின் நாம சங்கீர்த்தனம். ஆறாம் நாளான, 26ம்தேதி கணேஷ் குழுவினர் நாம சங்கீர்த்தனம். ஏழாம் நாளான, 27ம்தேதி விஷ்வ வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் நாம சங்கீர்த்தனம். எட்டாம் நாளான, 28ம்தேதி, கடலுார் ஜனனி வழங்கும் தமிழிசைக்கச்சேரி, நவராத்திரி நிறைவு நாளான, 29ம் தேதி ஸ்ரீமதி தேசமங்கையர்க்கரசியின், ஆன்மிக சொற்பொழிவு ஆற்ற உள்ளனர். நவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை, எஸ்.எம்., சில்க்ஸ் உரிமையாளர் எஸ்.மனோகரன்
செய்து உள்ளார்.