Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்தியால்பேட்டை முத்தாலம்மன் ... திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயிலில் நாளை புரட்டாசி சனி திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலையில் பல கோடி மதிப்புள்ள 6 சிலைக்கள் பறிமுதல்: 7 பேர் கைது
எழுத்தின் அளவு:
தி.மலையில் பல கோடி மதிப்புள்ள 6 சிலைக்கள் பறிமுதல்: 7 பேர் கைது

பதிவு செய்த நாள்

22 செப்
2017
12:09

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பச்சை மரகத நடராஜர் சிலை மற்றும் ஐந்து ஐம்பொன் சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர். ஏழு பேரை கைது செய்தனர்.

திருவண்ணாமலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையில், எஸ்.பி., பொன்னி உள்ளிட்ட, 10 பேர் கொண்ட போலீஸ் குழுவினர், நேற்று தீவிர விசாரணை நடத்தினர். சிலை கடத்தல் விற்பனை கும்பலை சேர்ந்தவர்களிடம், சிலை வாங்குபவர்கள் போல் நடித்து, அந்த கும்பலை தொடர்பு கொண்டு, கிரிவலப்பாதையில் எமலிங்கம் அருகே வரவழைத்து பேசினர். இதில், சிலை கடத்தல் கும்பலை சேர்ந்த நித்யானந்தம், 34, முருகன், 29, ஷ்யாம்சுந்தர், 47,பால்ராஜ், 49, செந்தில்குமார், 33, மூர்த்தி, 45, திவ்யநாதன், 60, ஆகிய, ஏழு பேர் கொண்ட கும்பல், போலீசாரிடம், பச்சை மரகத நடராஜர் சிலை மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள, ஐந்து ஐம்பொன் சிலை உட்பட, ஆறு சிலைகளை காண்பித்து, விலை பேசினர். அப்போது, போலீசார் அவர்களை மடக்கி பிடித்து, சிலைகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலையில், ஏழு பேர் கொண்ட சிலை கடத்தல் விற்பனை கும்பலை சேர்ந்தவர்களிடம், சிலை வாங்குவது போல், 10 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் சென்று, சிலைகளை பார்த்து, அவற்றின் விலை விசாரித்தனர். பச்சை மரகத நடராஜர் சிலை மற்றும், ஐந்து ஐம்பொன் சிலைகளை காண்பித்தனர். இதில், பச்சை மரகத நடராஜர் சிலைக்கு மட்டும், ஏழு கோடி ரூபாய் கேட்டனர். அந்த நேரத்தில், அவர்களை சுற்றி வளைத்து, ஏழு பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த சிலைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சிலைகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை. இவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின், சிலைகளின் முழு மதிப்பு தெரியவரும். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும், மாநிலம் முழுவதும் சிலை கடத்தி விற்பனை செய்தல் தொடர்பாக, 360 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இரண்டாம் திருநாள் இரவு ... மேலும்
 
temple news
கோவை; கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தின் கோவை புதூர் கிளையில் சுவாமிகளின் ... மேலும்
 
temple news
பழநி : பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநி ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி முதல் நாள் விழாவில் தங்க பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : நாட்டிலுள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களில் விஜய யாத்திரை புரிந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar