Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சோழவந்தான் பிரளயநாதர் கோயிலில் ... கோட்டைமேடு கோவில்களின் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செங்கண்மாலீஸ்வரர் கோவிலில் உண்டியல் வைக்க வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2017
01:09

தையூர் : பக்தர்கள் அதிகம் வரும், செங்கண்மாலீஸ்வரர் கோவில் மற்றும் கொளத்துார் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில், காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையைச் சார்ந்த, பிரசித்தி பெற்ற கோவில்களாக கேளம்பாக்கம் அடுத்த தையூர் செங்கண்மாலீஸ்வரர் கோவில் மற்றும் கொளத்துார் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில்கள் விளங்குகின்றன. பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள செங்கண்மாலீஸ்வரர் கோவிலுக்கு தினசரி நுாற்றுக்கணக்கான பக்தர்களும், பிரதோஷம், பவுர்ணமி மற்றும் விழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். இவ்வாறாக வரும் பக்தர்கள் தங்களின் பிரார்த்தனை காணிக்கைகளை செலுத்த உண்டியல் இல்லாததால் சிரமப்படுகின்றனர். தற்போது, இக்கோவிலுக்கு விவசாய நிலம் மற்றும் குடியிருப்புகளின் வாடகை மட்டுமே கிடைக்கிறது. இத்துடன், கோவிலுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க, உண்டியல் வைக்கவும், அர்ச்சனை மற்றும் அபிஷே கங்களுக்கு கட்டணம் வசூலிக்க பணியாளரை நியமிக்கவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல, 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த, புகழ்பெற்ற கொளத்துார் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலிலும் துறை சார்பில் காணிக்கை உண்டியல் வைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இவ்விரு கோவில்களிலும் உண்டியல் வைப்பதன் மூலம் கோவிலுக்கு அதிக வருவாயை ஈட்டலாம். இத்துடன் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர், மேலாளர், காவலர் உள்ளிட்டோருக்கும் அறநிலைத்துறையினர் முறையான ஊதியத்தை வழங்க வேண்டும். சமூகஆர்வலர்கள், தையூர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயில் ஸ்ரீராமநவமி ஆஸ்தான விழாவில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீராம நவமியை ... மேலும்
 
temple news
அயோத்தி; தெய்வீக மற்றும் அற்புதமான ராமர் கோவிலில் ராம் லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு இது முதல் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் சாமியார்புதூர் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோயிலில் ராம நவமி விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar