தேவாரம், கோம்பை திருமலைராயப் பெருமாள் மலைக்கோயிலில் புரட்டாசி சனிவார திருவிழா இன்று துவங்குகிறது. இங்கு சயன கோலத்தில் சுயம்புவாக மூலவர் உள்ளார். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவரை தரிசிக்க மாவட்டத்தின் பிற பகுதிகள், மத்திய கேரளா பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவர். இவர்களின் வசதிக்காக தேவாரம், போடி, கம்பத்திலிருந்து சிறப்பு பஸ்கள் மலையடிவார கோயிலுக்கு இயக்கப்படவுள்ளது. ராமக்கல்மெட்டு வனப்பாதை வழியாக கேரளாவிலிருந்து வரும் பக்தர்களுக்காக குடிதண்ணீர், மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் சனிவாரத்தையொட்டி ஊர்கோயிலில் இருந்து உற்சவர் ஊர்வலமாக மலை கோயிலுக்கு அழைத்து செல்லப்படுவது வழக்கம். நவராத்திரி விழா நடப்பதால் இந்த வாரம் சக்கரத்தாழ்வார் மலைகோயிலுக்கு அழைத்து செல்லப்படுவார்.