திருப்பதி பிரம்மோற்சவம்: சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2017 10:09
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளான நேற்று மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருமலை திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 23ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. முக்கிய நிகழ்வான கருட சேவை செப்டம்பர் 27ம் தேதியும், தேரோட்டம் 30ம் தேதியும் நடக்கிறது. அக்டோபர் 1ம் தேதி காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறவுள்ளது. விழாவின் 2ம் நாளில் மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .சுவாமி ஊர்வலத்திற்கு முன் ஏராளமான பக்தர்கள் நடனமாடி வந்தனர்.
எட்டு கோடியில் காசு மாலை: திருமலை மூலவரான சீனிவாசப்பெருமாளுக்கு பக்தர் ஒருவர், எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான காசு மாலையை முதல்வர் சந்திரபாபுநாயுடு முன்னிலையில் நன்கொடையாக வழங்கினார்.