பதிவு செய்த நாள்
25
செப்
2017
11:09
பவானி: மஹா புஷ்கர விழா, கோலாகலத்துடன் நிறைவு பெற்றது. பவானி, கூடுதுறை காவிரி ஆற்றில், எங்கள் பவானி பவுண்டேஷன் மற்றும் அகில பாரதிய துறவியர் சங்கம் சார்பில், மஹா புஷ்கர விழா, 20ல் தொடங்கி, நேற்றிரவு முடிந்தது. நிறைவு நாளான நேற்று, லட்சக்கணக்கான மக்கள், புனித நீராடினர். இதனால் கூடுதுறை பகுதி, மக்கள் கூட்டத்தால் அலைமோதியது. ஆயிரக்கணக்கானோர் காத்திருந்து குளித்தனர். இரவில், காவிரி ஆற்றின் மையப்பகுதியில் அமைக்கப்பட்ட, பிரமாண்ட மின் விளக்கு அலங்கார மேடையில், சிவாச்சாரியார்கள், காவிரி அன்னைக்கு பூஜைகள் செய்து மலர் தூவி, தீபாராதனை காட்டினர். இதை காவிரி ஆற்றுப்படித்துறையில் அமர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், தரிசனம் செய்தனர். அதிகாலை தொடங்கி இரவு வரை, அலைமோதிய கூட்டத்தில், சங்கமேஸ்வரர் கோவில் வளாகம், பவானி விழாக்கோலம் பூண்டது.