பதிவு செய்த நாள்
25
செப்
2017
01:09
சென்னை: விஜயதசமி தினத்தன்று, சென்னையின் இரண்டு இடங்களில், ’தினமலர்’ சார்பில், ’அரிச்சுவடிஆரம்பம்’ என்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், அவர்களுக்கான கல்வியை ஆரம்பிப்பதற்கும் உகந்த நாள், விஜயதசமி திருநாள். வரும், 30ல், விஜய தசமி வருகிறது. அன்று, ’தினமலர்’ சார்பில், இளம் தளிர்களுக்கு எழுத்தறிவை ஆரம்பித்து வைக்கும், அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சி, சென்னை, கீழ்ப்பாக்கம், பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியிலும், கிழக்கு தாம்பரம், ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், காலை, 10:30 மணிக்கு துவங்கும். இதில், எழுத்தாளர்களும், கல்வியாளர்களும், புகழ்பெற்ற பிரபலங்களும் பங்கேற்று, உங்களது குழந்தைகளின் பிஞ்சு விரல்களை பிடித்து, அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்க உள்ளனர்.
அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில், உங்கள் வீட்டில் உள்ள, இரண்டு வயது குழந்தைகளை அழைத்து வந்து, வித்யாரம்பம் செய்யலாம். இதில் பங்கேற்க, வி.ஆர்.ஜெயகுமார், 99443 09682 மற்றும் சி.வி.பிரகாஷ், 99443 09681 ஆகியோரின் மொபைல் எண்களுக்கு, குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முழு முகவரி, மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை எஸ்.எம்.எஸ்., ’வாட்ஸ் ஆப்’ வாயிலாக அனுப்பி வைக்கலாம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க எந்த கட்டணமும் இல்லை; அனுமதி இலவசம். பங்கேற்கும் அனைத்து மழலைகளுக்கும் பரிசுகள் உண்டு.