திருப்பதியில் பிரம்மோற்சவ தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2017 10:09
திருப்பதி: திருமலையில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் எட்டாம் நாளான இன்று(செப்.30) நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருமலை திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 23ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. முக்கிய நிகழ்வான கருட சேவை நேற்று (செப்.27ல்) நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவின் எட்டாம் நாளான இன்று(செப்.30) தேரோட்டம் நடைபெற்றது. தேரில் தேவியருடன் உற்சவர் மலையப்பசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த தேருக்கான தங்க கலசத்தை பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் நாவிதர்கள் சங்கத்தினர் நன்கொடையாக வழங்கினர். கலசத்திற்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்த கோஷம் முழுங்க சுவாமியை தரிசனம் செய்தனர். அக்டோபர் 1ம் தேதி காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறவுள்ளது.