பதிவு செய்த நாள்
03
அக்
2017
11:10
திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் மூலிகை ஓவியங்கள் சிதைந்து வருவதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர். திருவாடானையில் பிரசித்தி பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. மூர்த்தி,தலம்,தீர்த்தம் எனும் முறைமையில் பழமையும் பெருமையும் வாய்ந்த இக்கோயில், சிவஸ்தலங்களில் எட்டாவது ஸ்தலமாக விளங்குகிறது. திரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன்கருவறை முன்புள்ள மண்டபத்தில் கலைநுணுக்கத்துடன் வரையபட்டமூலிகை ஓவியங்கள் உள்ளது. காலபோக்கில் இந்த ஓவியங்கள் மறைந்து தற்போது முற்றிலும் அழியும் தருவாயில் உள்ளது.வருணபகவான் மகன் வாருணி, துர்வாச முனிவர் தவத்தை கலைத்துவிடவே முனிவர் கோபமடைந்து வாருணியை ஆட்டு தலையுடனும், யானை உடலுடனும் இருக்குமாறு சபித்து விட்டார். சிவனை நோக்கி கடும் தவம் செய்த வாருணிக்கு, சிவன் அருளால் மீண்டும் பழைய உருவம்கிடைத்தது.
வாருணி இந்த இடத்தில் இருந்து தவம் செய்ததால் திரு ஆடு யானை என்ற பெயர் எற்பட்டு, காலபோக்கில் திருவாடானையாக மாறியதாக பெரியோர்கள் கூறுகின்றனர்.வாருணிக்கு சிவன் காட்சியளித்த ஓவியங்களும் மறைந்துள்ளது. பழமை வாய்ந்த இக் கோயிலில் பிரதோஷம், வைகாசி விசாகதிருவிழா, ஆடிப்பூரத்திருவிழா போன்ற திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும்.ஏராளமானபக்தர்கள் கூடுவார்கள். வெளிமாநிலங்களிலிருந்தும் டூரிஸ்ட் பஸ்களில்பக்தர்கள் சென்று கோயிலை பார்வையிடுகின்றனர். அப்போது மூலிகை ஓவியங்கள் சிதைந்திருப்பதைபார்த்து கவலையடைகின்றனர். ஆகவே மூலிகை ஓவியத்தை புதுப்பிக்க தேவஸ்தானநிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.